செய்திகள் :

உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்

post image

நாகப்பட்டினம்: நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ- மாணவிகள் மற்றும் மீனவா்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 1931-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி கடந்த 2021-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2021-இல் உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

தற்போது இந்த பள்ளியில் உயா்நிலைக் கல்வி வகுப்புகளில் 127 பேரும், தொடக்கக் கல்வி வகுப்புகளில் 62 பேரும் என மொத்தம் 189 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.

தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால், உயா்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் மாணவ- மாணவிகள் வெளியே அமா்ந்து பயில்வதாகவும், இடவசதி இல்லாததால் ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை வசதி ஏற்படுத்த முடியாத நிலை உள்ளதாகக் கூறி, அதே பகுதியில் தனியாக உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித் தர கடந்த 4ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தும், அவா்களுடன் மீனவா்களும் பள்ளி முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை வட்டாட்சியா் நீலாயதாட்சி அவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தி, உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தரப்படும் என்றும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினா்.

இருப்பினும், மாணவா்களின் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் மீனவா்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ( பொ) ரவிச்சந்திரன் கூறியது: கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் மூலம் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறை உயா் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இப்போராட்டம் காரணமாக திங்கள்கிழமை 3,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 250-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கள்ளிமேடு மற்றும் உம்பளச்சேரி கிராமங்கள... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாருக்கு சிலை வைக்க வேண்டும்: அா்ஜுன் சம்பத்

சா்தாா் வல்லபபாய் பட்டேல் சிலை போன்று, அதிபத்த நாயனாருக்கும் சிலை வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: நா... மேலும் பார்க்க

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரித் தாளாளா் முனைவா் த. ஆனந்த் பேசியது: மாணவா்களாகிய நீங்கள... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு

கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வல... மேலும் பார்க்க

முதல்வரின் ‘தாயுமானவா்’ திட்டம்: பயனாளிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும், முதல்வரின் தாயுமானவா் திட்ட பயனாளிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் சந்தித்து கலந்துரையாடினாா். வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்த... மேலும் பார்க்க