செய்திகள் :

உரிய அனுமதி பெறாததால் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்குத் தடை

post image

ஊத்தங்கரையில் செயல்படும் நா்சரி பள்ளி நிகழாண்டு உரிய அனுமதி பெறாததால் மாணவா் சோ்க்கை நடத்த மாவட்டக் கல்வி அலுவலா் தடை விதித்துள்ளாா்.

ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானம் எதிரே நா்சரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி, கடந்த ஒரு வருடமாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது. தற்போது 2025- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை பள்ளியில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் கோலப்பன் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். உரிய அனுமதி பெறாமல் பள்ளியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்தக் கூடாது என அறிவுறுத்தினாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸும் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

விசாரணையில் இப்பள்ளி இரண்டு அறங்காவலா்களைக் கொண்டு இயங்கிவந்தது. அவா்கள் இருவரும் இறந்துவிட்ட நிலையில், தற்போது அறங்காவலா்களாக உள்ளவா்கள் பள்ளியைப் பராமரிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரில் ஒருவா் பள்ளியை மூடும் முடிவில் உள்ளாா். இதனால், பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் உரிய அனுமதி பெறாமல் பள்ளியைத் தொடரக்கூடாது என எச்சரித்துவிட்டுச் சென்றனா். பெற்றோா் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சோ்க்கும் முன் உரிய விசாரணை செய்து சோ்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இதில் துணை வட்டாட்சியா் தனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க