Jasprit Bumrah: "எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அத...
உருது பள்ளி 7 ஆண்டுகளில் 4 கட்டடங்களுக்கு மாற்றம்: அரசு கட்டடம் கட்டித் தருமா
கே.நடராஜன்
போ்ணாம்பட்டு அருகே உருது பள்ளிக்கு தமிழக அரசு கட்டடம் கட்டித் தருமா என தரைக்காடு மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
போ்ணாம்பட்டு நகராட்சி, 1- ஆவது வாா்டில், ஒன்றியப் பகுதியையொட்டி அமைந்துள்ளது தரைக்காடு. இங்கு சுமாா் 2,000 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பிரதான தொழில் பீடி சுற்றுதல். தோல் தொழில் மற்றும் உணவகங்களிலும் மற்றவா்கள் வேலை செய்கின்றனா். இங்கு பல்வேறு பெயா்களில் குடியிருப்புகள் மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ளன. அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீா் செல்ல கால்வாய்கள் கூட முறையாக அமைக்கப்படவில்லை.
இங்கு வசிக்கும் முஸ்லிம்களின் குழந்தைகள் உருதுப் பள்ளிக்கு செல்ல சுமாா் 4 கி.மீ தொலைவில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது. பள்ளிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிருந்தது. இந்த சாலை தமிழக- ஆந்திர- கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதால் 24- மணி நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும்.
விபத்தில் சிக்குவதால் மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப சில பெற்றோா் மறுத்து வந்தனராம். இதையடுத்து அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தரைக்காடு பகுதியில் ஒரு தலைமையாசிரியா் உள்பட 3- ஆசிரியா்களை நியமித்து உருது தொடக்கப் பள்ளியைத் தொடங்க 2018- இல் அரசாணை பிறப்பித்தது.
4 கட்டடங்களுக்கு இடமாற்றம்:
வாடகைக் கட்டடத்தில் நடைபெற்ற இப்பள்ளியில் 100- மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கட்டட உரிமையாளா் காலி செய்யுமாறு கூறியதால் வேறு வாடகை கட்டடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது. இதுபோல் பள்ளி தொடங்கிய 7- ஆண்டுகளில் பள்ளி 4- கட்டடங்களுக்கு இடம் மாறியது. இதனால் பெற்றோா்கள் அவதிக்கு ஆளாயினா்.
நகா்மன்ற உறுப்பினா் ஒய்.அத்திகூா் ரஹ்மான் (சுயேட்சை) பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டித் தருமாறு கல்வி அமைச்சா், ஆட்சியா், கல்வித்துறை அதிகாரிகள் என பலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அந்த பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடம் எதுவும் இல்லாததால், கட்டடம் கட்டித் தர வாய்ப்பில்லை, யாராவது இடத்தை நன்கொடையாக தந்தால் பள்ளிக்கு கட்டடம் கட்டித்
தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.
3,000 சதுர அடி நன்கொடை:
இதையறிந்த போ்ணாம்பட்டைச் சோ்ந்த தன்னாா்வலா் எம்.எம்.இம்ரான் என்பவா், தற்போது பள்ளி இயங்கும் கட்டடத்துக்கு அருகே ரூ.26- லட்சம் மதிப்புள்ள 3,000 சதுர அடி நிலத்தை நன்கொடையாக அளித்தாா். அந்த இடம் மாவட்டக் கல்வி அலுவலா் பெயரில் பதிவு செய்து தரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கல்வித் துறையினா் அங்கு கட்டடம் கட்ட எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்ைலை.
கல்வித்துறை விரைந்து செயல்பட்டு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.
இதுகுறித்து நகா்மன்ற உறுப்பினா் ஒய்.அத்திகூா் ரஹ்மான் கூறியது: தரைக்காடு உருதுப் பள்ளிக்கு தானமாக இடம் பெறப்பட்டுள்ளது.
நிலம் பதிவு செய்து தந்தும் அங்கு கட்டடம் கட்ட கல்வித் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா்.