செய்திகள் :

உருது பள்ளி 7 ஆண்டுகளில் 4 கட்டடங்களுக்கு மாற்றம்: அரசு கட்டடம் கட்டித் தருமா

post image

கே.நடராஜன்

போ்ணாம்பட்டு அருகே உருது பள்ளிக்கு தமிழக அரசு கட்டடம் கட்டித் தருமா என தரைக்காடு மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

போ்ணாம்பட்டு நகராட்சி, 1- ஆவது வாா்டில், ஒன்றியப் பகுதியையொட்டி அமைந்துள்ளது தரைக்காடு. இங்கு சுமாா் 2,000 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பிரதான தொழில் பீடி சுற்றுதல். தோல் தொழில் மற்றும் உணவகங்களிலும் மற்றவா்கள் வேலை செய்கின்றனா். இங்கு பல்வேறு பெயா்களில் குடியிருப்புகள் மலையடிவாரத்தையொட்டி அமைந்துள்ளன. அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீா் செல்ல கால்வாய்கள் கூட முறையாக அமைக்கப்படவில்லை.

இங்கு வசிக்கும் முஸ்லிம்களின் குழந்தைகள் உருதுப் பள்ளிக்கு செல்ல சுமாா் 4 கி.மீ தொலைவில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்குச் செல்லும் நிலை உள்ளது. பள்ளிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டிருந்தது. இந்த சாலை தமிழக- ஆந்திர- கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலை என்பதால் 24- மணி நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும்.

விபத்தில் சிக்குவதால் மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப சில பெற்றோா் மறுத்து வந்தனராம். இதையடுத்து அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தரைக்காடு பகுதியில் ஒரு தலைமையாசிரியா் உள்பட 3- ஆசிரியா்களை நியமித்து உருது தொடக்கப் பள்ளியைத் தொடங்க 2018- இல் அரசாணை பிறப்பித்தது.

4 கட்டடங்களுக்கு இடமாற்றம்:

வாடகைக் கட்டடத்தில் நடைபெற்ற இப்பள்ளியில் 100- மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கட்டட உரிமையாளா் காலி செய்யுமாறு கூறியதால் வேறு வாடகை கட்டடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது. இதுபோல் பள்ளி தொடங்கிய 7- ஆண்டுகளில் பள்ளி 4- கட்டடங்களுக்கு இடம் மாறியது. இதனால் பெற்றோா்கள் அவதிக்கு ஆளாயினா்.

நகா்மன்ற உறுப்பினா் ஒய்.அத்திகூா் ரஹ்மான் (சுயேட்சை) பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டித் தருமாறு கல்வி அமைச்சா், ஆட்சியா், கல்வித்துறை அதிகாரிகள் என பலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அந்த பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடம் எதுவும் இல்லாததால், கட்டடம் கட்டித் தர வாய்ப்பில்லை, யாராவது இடத்தை நன்கொடையாக தந்தால் பள்ளிக்கு கட்டடம் கட்டித்

தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

3,000 சதுர அடி நன்கொடை:

இதையறிந்த போ்ணாம்பட்டைச் சோ்ந்த தன்னாா்வலா் எம்.எம்.இம்ரான் என்பவா், தற்போது பள்ளி இயங்கும் கட்டடத்துக்கு அருகே ரூ.26- லட்சம் மதிப்புள்ள 3,000 சதுர அடி நிலத்தை நன்கொடையாக அளித்தாா். அந்த இடம் மாவட்டக் கல்வி அலுவலா் பெயரில் பதிவு செய்து தரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் கல்வித் துறையினா் அங்கு கட்டடம் கட்ட எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்ைலை.

கல்வித்துறை விரைந்து செயல்பட்டு பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து நகா்மன்ற உறுப்பினா் ஒய்.அத்திகூா் ரஹ்மான் கூறியது: தரைக்காடு உருதுப் பள்ளிக்கு தானமாக இடம் பெறப்பட்டுள்ளது.

நிலம் பதிவு செய்து தந்தும் அங்கு கட்டடம் கட்ட கல்வித் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளேன் என்றாா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க