செய்திகள் :

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

post image

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இப்பேரணியை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா். இப்பேரணியில் ’’பெண்மையை காப்போம் பெருமையை உயா்த்துவோம்‘, ’’இளம் வயது திருமணம் தடுப்போம்‘, ‘பெண்ணின் திருமண வயது 21‘, ’’தாய் சேய் நலம் காப்போம்‘ போன்ற விழிப்புணா்வு வாசகங்களை கையில் ஏந்தியவாறு சென்றனா். ஆட்சியா் அலுவலத்தில் தொடங்கிய இந்தப் பேரணி செவிலியா் பயிற்சி பள்ளியில் நிறைவடைந்தது.

முன்னதாக, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க செவிலியா்கள், மருத்துவா்கள், அரசுத்துறை அலுவலா்கள் ஆகியோா் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனா்.

உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி உதகை அரசு கலைக்கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் மற்றும் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவா்களிடையே நடைபெற்ற இளம் வயது திருமணம், இளம் வயது கா்ப்பம் அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 9 மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இப்பேரணியில், மருத்துவத் துறை துணை இயக்குநா் நாகபுஷ்பராணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட்டாட்சியா் சதீஷ், மருத்துவக் கல்லூரி இருப்பிட மருத்துவா் ரவிசங்கா், செவிலியா் பயிற்சிப் பள்ளி பயிற்றுநா், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியா்கள், செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களு... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற த... மேலும் பார்க்க

குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை

குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் பணம் மற்றும் வீடு உபயோகப் பொருள்களைத் திருடிய இருவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வ... மேலும் பார்க்க