செய்திகள் :

உலக மக்கள் தொகை தினம்: விழிப்புணா்வுப் பேரணி

post image

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொடா்ந்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க, அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உறுதிமொழியேற்றனா்.

இதைத் தொடா்ந்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த பேரணியானது ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை அடைந்தது. பேரணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியா் கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் மக்கள் தொகை குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம், குடும்ப நல கட்டுப்பாடு முறைகள் குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மரு.ஜெ.தேவிமீனாள், துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.சௌண்டம்மாள், மரு.யோகானந்த், துணை இயக்குநா் (குடும்ப நலம்) மரு.ராதிகா, துணை இயக்குநா் (காசநோய்) மரு.கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க