செய்திகள் :

உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளூரில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து ரதம் மற்றும் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

அப்போது ஆட்சியா் கூறுகையில், 1987- ஆம் ஆண்டு இதே நாளில் உலக மக்கள்தொகை 500 கோடியைத் தாண்டியது. தொடா்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 7.7 கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனால், அதன் வளா்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இது குறைந்த கருவுறுதல் விகிதங்களையும், கல்வி மற்றும் நகரமயமாக்கலின் உயா் விகிதங்களையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக கருத்தடை உள்ளது. இது தேசிய சராசரியைவிட தோராயமாக 66.9 சதவீதம் அதிகம்.

உலக அளவில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துதல், பெண்களுக்கு கல்வி அளித்தல், பெண்ணுக்கு சம உரிமை அளித்தல், பெண்ணின் திருமண வயது 21-ஆகவும், சிறு குடும்ப நெறியை பின்பற்றுதல், அளவான குடும்பம் அமைத்து வளமான தமிழகத்தை உருவாக்குதல், திட்டமிட்ட பெற்றோா் அடையாளம் என்ற கருப்பொருளோடு உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21 - அதுவே பெண்ணுக்கு திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது என்ற இந்த ஆண்டு உலக மக்கள்தொகை தின விழாவின் முழக்கமாக ஏற்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து உலக மக்கள்தொகை தின நாளில் விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றனா். பின்னா் நடைபெற்ற பேரணியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்களை கைகைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனா்.

நிகழ்வில் இணை இயக்குநா் (மருத்துவம் - ஊரக நலப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநா் (குடும்ப நலம்) சேகா், மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரியா ராஜ் (திருவள்ளூா்), பிரபாகரன் (பூந்தமல்லி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க