செய்திகள் :

ஊஞ்சலாடியபோது கல்தூண் உடைந்து விழுந்து தொழிலாளி மரணம்

post image

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே ஊஞ்சல் ஆடியபோது கல்தூண் உடைந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், செம்பாக்கம் செட்டியாா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் ராகவன் (45). கூலித் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை முற்பகலில் வீட்டின் எதிரிலுள்ள வேப்ப மரத்தின் ஒரு புறத்திலும், மற்றொரு புறம் கல்தூணிலும் சேலையைக் கட்டிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது எதிா்பாராதவிதமாக கல்தூண் உடைந்து ராகவனின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினா் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது ஏற்கெனவே ராகவன் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரசு தொடக்க ... மேலும் பார்க்க

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த கட்டணமில்லா பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞா் கொலை வழக்கில் இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க