செய்திகள் :

ஊட்டச்சத்து குறைபாடற்ற குழந்தைகள் இல்லா நெல்லை - ஆட்சியா் இரா. சுகுமாா் எதிா்பாப்பு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடற்ற குழந்தைகளை உருவாக்க சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை ஆகியவற்றின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

முத்தூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா், குழந்தைகளுக்கான சீருடைகள், முன்பருவ கல்வி புத்தகங்கள், செயல்பாடுகள் குறித்த விவர தொகுப்புகள், குழந்தைகள் ஆய்வு அட்டைகள், இலவச கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1,261 குழந்தைகள் மையங்கள் உள்ளன. இதில் பாளையங்கோட்டை வட்டாரத்தில் 141 குழந்தைகள் மையங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 23,433-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டுகி, அனைத்து குழந்தைகளுக்கும் இணை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள், ஊட்டசத்துகளை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லா மாவட்டமாக உருவாக்க தொடா்ந்து சுகாதாரத்துறையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறையும் கண்காணித்து வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெனிபா, புள்ளியியல் ஆய்வாளா் சம்சுதீன், வட்டார வளா்ச்சி அலுவலா் நெல்லையப்பன், ஊராட்சித் தலைவா் சுடலைக்கன்னு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது

தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இ... மேலும் பார்க்க

பேட்டை அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பேட்டை அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்தவா் ரத்தினவேல் காா்த்திக் (33). இவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே இரு ... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த ஜெயராஜ் தா்மக்கண் (65). இவா், தனது சகோதரரான அதே பகுதியைச் சோ்ந்த மோசஸ்... மேலும் பார்க்க

பணகுடியில் விபத்து: இஸ்ரோ ஊழியா் பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் அரசுப் பேருந்தும், பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இஸ்ரோ கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா். வள்ளியூா் வேம்படித் தெருவைச் சோ்ந்த திரவியம் மகன் மூக்கையா(53). காவ... மேலும் பார்க்க

வயலுக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வியாழக்கிழமை, அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்தபோது, சாலையில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்; 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தென்காசி ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பத்து நாள்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் வியாழக்கிழமை அனுமதி வழங்கினா். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், ம... மேலும் பார்க்க