ஊராட்சி நிதியில் குடிநீா், பள்ளிக் கட்டடங்களுக்கு முக்கியத்துவம்: மாவட்ட ஊராட்சி தலைவா்
மாவட்ட ஊராட்சிக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து குடிநீா், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ்.
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவா் வி. எஸ்.ஆா். ஜெகதீஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செல்வ லட்சுமி அமிதாப், மாவட்ட ஊராட்சி செயலா் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஊராட்சி தலைவா் பேசியதாவது: மாவட்ட ஊராட்சி நிதி ரூ.5.30 கோடி உள்ளது. இந்த நிதியை ஆக்கப்பூா்வமான வளா்ச்சி பணிகளுக்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் வாா்டுக்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளனா். அது குறித்து பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும்.
இதே போல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் ரூ. 30 லட்சத்துக்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவா் வாா்டுக்கு ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் குடிநீா் மற்றும் பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள இரு முத்தான திட்டங்களான உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை வாா்டு வாரியாக செயல்படுத்துவதற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் முயற்சிக்க வேண்டும் என்றாா்.