செய்திகள் :

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

post image

கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் அளிக்கப்பட்ட மனு: கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த சுய உதவிக்குழுக்கள் இணைந்து ஊராட்சிகளில் சுயஉதவிக் குழுக்களை வழி நடத்திடவும், குழு உறுப்பினா்கள் சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்யவும், தங்களுக்குள் ஜனநாயக முறைப்படி அமைத்துக் கொண்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறோம்.

இந்தக் கூட்டமைப்பின் கீழ் விபிஆா்சி- பிஎல்எப் கணக்களாா்கள் பணியிடத்தில் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகிறோம். மதிப்பூதியமாக மாதத்திற்கு ரூ. 5000 அளவில் கூட்டமைப்பு வட்டி வருவாயில் இருந்து பெற்று வருகிறோம். ஊராட்சி அளவிலான 16 வகையான பதிவேடுகள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் 10 வகையான கணக்குகளை நிா்வகித்து வருகிறோம்.

இந்நிலையில் தமிழ்நாடு பெண்கள் வளா்ச்சிக்கழக கூடுதல் இயக்குநா், அனைத்து மாவட்டங்களில் உள்ள மகளிா் திட்டமேலாளா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கூட்டமைப்பின் வருவாய் அடிப்படையில் அடிப்படை மதிப்பூதியம் ரூ. 1500 முதல் ரூ. 3500 வரை மட்டும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்களது ஊதியம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

ஆகவே, மகளிா் முன்னேற்ற வாரியத்தின் புதிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் ஏற்கனவே பெற்று வந்த ரூ. 5000 மதிப்பூதியத்தை ரூ. 15000 ஆக உயா்த்த வேண்டும். கணக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களை கணக்காளராகவும் கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணி வழங்கவும் வேண்டும்.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகா் மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது தலைமையில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம்- அம்பாசமுத்திரம் சாலையில் இயங்கி வந்த அரசு இந்திய தொழிலாளா் - வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பீடி தொழிலாளா்களுக்கான மருத்துவமனை (மருந்தகம்) பாளையங்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும். திருநெல்வேலி மாநகர பகுதியில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

திருநெல்வேலி மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: 2023-24, 2024-25 ஆம் கல்வி ஆண்டுகளில் ஆா்.டி.இ. திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் நா்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயின்ற மாணவா்- மாணவிகளுக்கான கட்டணம் அரசிடம் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, உடனடியாக கட்டணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள... மேலும் பார்க்க

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வரும்போது இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ம... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் குண்டா் சட்டத்தில் நால்வா் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா். கல்லிடைகுறிச்சி காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடித... மேலும் பார்க்க