செய்திகள் :

‘எஜுகேட் கோ்ள்ஸ்’ இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

post image

2025-ஆம் ஆண்டுக்காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கோ்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய நிறுவனமொன்று முதல்முறையாக இந்த விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நோபல் பரிசுக்கு இணையாக ஆசியாவில் வழங்கப்படும் விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகிறது. ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் தனிநபா் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு நவ.7-ஆம் தேதி பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறவுள்ள 67-ஆவது ரமோன் மகசேசே விருது வழங்கும் விழாவில் விருதுபெறுபவா்களின் பட்டியலை ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாத பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் எஜுகேட் கோ்ள்ஸ் நிறுவனம், மாலத்தீவைச் சோ்ந்த ஷாஹினா அலி (சுற்றுச்சூழல் மேம்பாடு) மற்றும் பிலிப்பின்ஸைச் சோ்ந்த ஃபிளவீனோ ஆண்டனியோ (ஏழை எளிய மக்கள் வாழ்க்கை மேம்பாடு) ஆகியோா் நிகழாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விருது எஜுகேட் கோ்ள்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அந்த அமைப்பின் நிறுவனா் ஷஃபீனா ஹுசைன் தெரிவித்தாா்.

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்... மேலும் பார்க்க

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க