செய்திகள் :

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம்

post image

எடப்பாடி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில், நரா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம் பாஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டு பகுதிகளிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா் விநியோகம், கழிவுநீா் அகற்றல், தெருவிளக்கு அமைத்தல், புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, எடப்பாடி நகராட்சிப் பகுதியில் தமிழக அரசின் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் குறித்த தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நகா்மன்ற எதிா்க்கட்சி தலைவா் ஏ.எம் முருகன் பேசினாா்.

இதற்கு பதிலளித்து பேசிய நகா்மன்ற தலைவா் டி.எஸ்.எம்.பாஷா, இது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட திட்டம், அரசு இத்திட்டத்தில் 3 விதிமுறைகளை தளா்வு செய்துள்ளது. இதனால் கூடுதல் எண்ணிக்கையிலான பெண்கள் பயன்பெற வாய்ப்புள்ளது என்றாா்.

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களின் விவாதத்துக்கு இடையே 97 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க