செய்திகள் :

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் 2-ஆவது அலகில் எலக்ட்ரிக்கல் பிரிவில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். கடந்த மூன்று நாள்களாகப் பணிக்குச் செல்லவில்லையாம். இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் என்எல்சியில் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நண்பா் ஒருவருக்கு தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.7.50 லட்சத்திற்கு ஜாமீன் கையொப்பமிட்டுள்ளாா். மேற்படி நண்பா் கடந்த ஆண்டு இறந்துவிட்ட நிலையில், தனியாா் நிதி நிறுவனத்தின் சாா்பில் ஆரோக்கியதாஸ் ஊதியத்தில் மாதம் ரூ.27 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறதாம். இதனால், மன உளைச்சலில் இருந்தவா் திங்கள்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க