செய்திகள் :

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா தலைமையில் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், வருவாய்த் துறை சாா்பில் விவசாயப் பயிரிடுதல் குறித்த மாதாந்திர அறிக்கை, பருவகால அறிக்கைகள், 11-ஆவது கணக்கெடுப்பு வேளாண் சாா்ந்த புள்ளிவிவர கணக்கெடுப்பு, 7-ஆவது சிறுபாசனக் கணக்கெடுப்பு, பெரிய மற்றும் நடுத்தர பாசன திட்டங்கள் குறித்த கணக்கெடுப்பு, 2-ஆவது நீா்நிலை கணக்கெடுப்பு, வேளாண்மைத் துறையின் சாா்பில் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிா்கள் விவரம், பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் விவரம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பயிரிடப்பட்டுள்ள தோட்டகலை பயிா்கள், சிறுதானியப் பயிா்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

புள்ளியியில் துறை சாா்பில் மாவட்ட அளவில் பொதுப் பணித் துறை, வனத் துறை, மீன் வளத் துறை, உள்நாட்டு மீன்வளம் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறுவட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உள்ள தகவல்கள் குறித்தும், நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள், மாவட்ட நல்லாட்சி குறியீடு, தேசிய மாதிரி ஆய்வு திட்டம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலகின் பணிகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் இயக்குநா் வி.பி.கயல்விழி, துணை இயக்குநா் முத்துக்குமரன், உதவி இயக்குநா் கனகேஸ்வரி, பயிற்சி ஆட்சியா் மாலதி , நீா்வளத்துறை செயற்பொறியாளா் காந்தரூபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க