Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சிதம்பரத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17-வது நகர மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நகரத் தலைவா் எம்.அமுதா தலைமை வகித்தாா். மாதா் சங்க மூத்த உறுப்பினா் எஸ்.ஞானமணி சங்கக் கொடியை ஏற்ற, சங்க மாநில தலைவா் எஸ்.வாலண்டினா மாநாட்டை துவக்கி வைத்து பேசினாா். நகர செயலா் வி.மல்லிகா வேலை அறிக்கை வாசித்தாா். நகர பொருளாளா் கவிதா வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். மாவட்டச் செயலா் பி.மாதவி, நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், மருத்துவா் எஸ்.ஜீவரத்தினம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ராணி. மாணவா் சங்க நகர செயலா் சபரி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மாதா் சங்க சிதம்பரம் நகர புதிய தலைவராக எஸ்.பாரதி, செயலராக எம்.அமுதா, பொருளாளராக பி.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 15 போ் கொண்ட நகா் குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா். கடலூா் மாவட்ட துணை தலைவா் பி.தேன்மொழி சங்கத்தின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு மாதா் சங்கம் எவ்வாறு போராடியதை சுட்டிகாட்டி மாநாட்டின் நிறைவுறையாற்றினாா்.
தீா்மானங்கள்:
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் கடலூா் மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட வேண்டும், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு என ஆயிரம் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும், அண்ணாமலைநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.