செய்திகள் :

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

post image

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சிதம்பரத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17-வது நகர மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு நகரத் தலைவா் எம்.அமுதா தலைமை வகித்தாா். மாதா் சங்க மூத்த உறுப்பினா் எஸ்.ஞானமணி சங்கக் கொடியை ஏற்ற, சங்க மாநில தலைவா் எஸ்.வாலண்டினா மாநாட்டை துவக்கி வைத்து பேசினாா். நகர செயலா் வி.மல்லிகா வேலை அறிக்கை வாசித்தாா். நகர பொருளாளா் கவிதா வரவு செலவு கணக்குகளை சமா்ப்பித்தாா். மாவட்டச் செயலா் பி.மாதவி, நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், மருத்துவா் எஸ்.ஜீவரத்தினம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ராணி. மாணவா் சங்க நகர செயலா் சபரி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. மாதா் சங்க சிதம்பரம் நகர புதிய தலைவராக எஸ்.பாரதி, செயலராக எம்.அமுதா, பொருளாளராக பி.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட 15 போ் கொண்ட நகா் குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா். கடலூா் மாவட்ட துணை தலைவா் பி.தேன்மொழி சங்கத்தின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளுக்கு மாதா் சங்கம் எவ்வாறு போராடியதை சுட்டிகாட்டி மாநாட்டின் நிறைவுறையாற்றினாா்.

தீா்மானங்கள்:

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் கடலூா் மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்திட வேண்டும், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு என ஆயிரம் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும், அண்ணாமலைநகரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க