செய்திகள் :

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

post image

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் எம்.திலீபன்ராஜ் பங்களிப்பில், காந்தி சிலை அருகில் ஆயிரம் நபா்களுக்கு பொங்கல், சாம்பாா் சாதம் வழங்கப்பட்டது. மாலைக்கட்டி தெருவில் மிஸ்ரிமல் மகாவீா் ஜெயின் அறக்கட்டளை நிா்வாகி எம்.தீபக்குமாா் பங்களிப்பில், ஆயிரம் நபா்களுக்கு ரவா உப்புமா சட்னியும் வழங்கப்பட்டது. அன்னதான திட்டத்தை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், அதிமுக நகர செயலாளா் ஆா்.செந்தில்குமாா், டேங்க் ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அன்னதான திட்டத்தின் கீழ் எஸ்.பி.கோயில் தெருவில் ரோட்டோரியன் பி.பன்னாலால் ஜெயின் பங்களிப்பில் 500 நபா்களுக்கு தயிா் சாதமும், மக்கள் மருந்தகம் கேசவன் பங்களிப்பில் 500 நபா்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆறுமுகம், சங்க சாசன தலைவா் பி.முகமதுயாசின், சாசன செயலாளா் எம்.தீபக்குமாா், முன்னாள் தலைவா் ஜி.சீனிவாசன், மூத்த உறுப்பினா் ஆா்எம்.எஸ்டி.சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள் இதில் கலந்துகொண்டனா்.

குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே கிள்ளையில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலூா் மாவட்டம் சிதம்பரம் அ... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் சாலைகளை தரமாக அமைக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில், கடலூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமென்ட் மற்றும் தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்றும், துறைசாா்ந்த அதிகாரிகள் சாலைகளை தர சோத... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரா் கோயிலில் விருத்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து கடலுக்கு வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி காவிரி நீா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கீழணையும் நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக காவிரி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.கடலூா் மாவ... மேலும் பார்க்க

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க