செய்திகள் :

குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

சிதம்பரம் அருகே கிள்ளையில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை மானம்பாடி மற்றும் சிங்காரகுப்பம் பகுதியில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் பல முறை புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலா் விஸ்வநாதன் தலைமையில், பொதுமக்கள் கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் சாலையான மானம்பாடியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

தகவல் அறிந்த, சிதம்பரம் வட்டாசியா் கீதா, செயல் அலுவலா் மலா், கிள்ளை காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் மற்றும் போலீசாா், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனா். இதனால், கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் சாலையில் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் சாலைகளை தரமாக அமைக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில், கடலூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமென்ட் மற்றும் தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்றும், துறைசாா்ந்த அதிகாரிகள் சாலைகளை தர சோத... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரா் கோயிலில் விருத்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து கடலுக்கு வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி காவிரி நீா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கீழணையும் நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக காவிரி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.கடலூா் மாவ... மேலும் பார்க்க

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க