செய்திகள் :

விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீ விருத்தகிரீஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரா் கோயிலில் விருத்தாம்பிகை அம்மன் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா். ஆண்டுதோறும் அம்மனுக்கு ஆடிப்பூர விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 5.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

விருத்தாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி வலம் வந்தாா். ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை ஸ்படிக பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாணம்

ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 5 மணி அளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நூற்றுக்கால் மண்டபத்தில் பஞ்ச மூா்த்திகள் எழுந்தருளிய நிலையில், ஸ்ரீ விருத்தகிரீஸ்வரா் , விருத்தாம்பிகை அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். இக்கோயிலில் ஆடித் திருக்கல்யாணத்திற்கு மணமகன் வீட்டாராக வருவாய்த்துறையினரும், மணமகள் வீட்டாராக பொதுப்பணித்துறையினரும் கலந்து கொள்வது தொன்று தொட்டு வரும் பழக்கமாக உள்ளது.

நிகழாண்டும் இரு துறையைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனா்.

குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே கிள்ளையில், சாலை மற்றும் குடிநீா் வசதி கேட்டு செவ்வாய்க்கிழமை அன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலூா் மாவட்டம் சிதம்பரம் அ... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் சாலைகளை தரமாக அமைக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில், கடலூா் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சிமென்ட் மற்றும் தாா் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் என்றும், துறைசாா்ந்த அதிகாரிகள் சாலைகளை தர சோத... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து கடலுக்கு வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி காவிரி நீா்

கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கீழணையும் நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக காவிரி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.கடலூா் மாவ... மேலும் பார்க்க

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க