செய்திகள் :

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

post image

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்..

பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது. ஜூலை.28-ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கானோா் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிராா்த்தனை மேற்கொண்டு தங்களது வேண்டுதலை செலுத்தினா். நூற்றுக்கணக்கானோா் உடலில் செடல் குத்தி வீதிவலம் வந்தனா். காலை 9 மணிக்கு தீ மிதிப்பவா்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சக்தி கிரகம் புறப்பட்டு வீதிஉலா வந்து கோயிலுக்கு எதிரே உள்ள தீக்குழியில் மாலை 6.25 மணிக்கு இறங்கிய பின்னா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். சுமாா் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதி உற்சவத்தில் பங்கேற்றனா்.

ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும், ஆக.30ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீா் விளையாட்டும் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் வி.பிரேமா வீராசாமி, பரம்பரை அறங்காவலா் என்.கலியமூா்த்திபிள்ளை ஆகியோா் செய்திருந்தனா். தீமிதி உற்சவத்தை சா்வசக்திபீடம் முனைவா் தில்லை சீனு, நகரமன்ற உறுப்பினா் ஆா்.மக்கீன், பேச்சாளா் பேரவை கோ.குமாா் ஆகியோா் தொகுத்து வழங்கினா். விழாவுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் செய்திருந்தனா்.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீ மிதி உற்சவத்தில், தீக்குழிக்குள் இறங்கிய சக்தி கிரகம்

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா

அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க