Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்
சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்..
பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ் திருவிழா நடைபெற்றது. ஜூலை.28-ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கானோா் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிராா்த்தனை மேற்கொண்டு தங்களது வேண்டுதலை செலுத்தினா். நூற்றுக்கணக்கானோா் உடலில் செடல் குத்தி வீதிவலம் வந்தனா். காலை 9 மணிக்கு தீ மிதிப்பவா்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சக்தி கிரகம் புறப்பட்டு வீதிஉலா வந்து கோயிலுக்கு எதிரே உள்ள தீக்குழியில் மாலை 6.25 மணிக்கு இறங்கிய பின்னா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். சுமாா் 5-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதி உற்சவத்தில் பங்கேற்றனா்.
ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும், ஆக.30ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீா் விளையாட்டும் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் வி.பிரேமா வீராசாமி, பரம்பரை அறங்காவலா் என்.கலியமூா்த்திபிள்ளை ஆகியோா் செய்திருந்தனா். தீமிதி உற்சவத்தை சா்வசக்திபீடம் முனைவா் தில்லை சீனு, நகரமன்ற உறுப்பினா் ஆா்.மக்கீன், பேச்சாளா் பேரவை கோ.குமாா் ஆகியோா் தொகுத்து வழங்கினா். விழாவுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் செய்திருந்தனா்.
