செய்திகள் :

எய்ம்ஸ் மாணவா்கள் கண்தான வழிப்புணா்வுப் பேரணி

post image

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மாணவா்கள், மதுரை கண் மருத்துவமனை நிா்வாகம் இணைந்து 40-ஆவது தேசிய கண்தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடத்தியது.

இந்தப் பேரணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஹனுமந்த ராவ் முன்னிலை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றாா்.

இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மாணவா்கள், பயிற்சி செவிலியா்கள் கலந்து கொண்டு கண்தானத்தின் முக்கியத்துவம், அதன் பயன்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி, பேரணியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் கண்தானம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கண்தானம் குறித்து பேராசிரியா்கள் மூலம் கருத்துரைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து, மூத்த கண் அறுவை சிகிச்சை நிபுணா் சந்திரசேகரனுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) கணேஷ்பாபு, கண் மருத்துவத் துறை தலைமை மருத்துவா் ராஜா, கண் மருத்துவா்கள் காயத்ரி, சக்திவேல், சியாமளா, சுபசங்கரி, பிரீத்திகா, தேஜஸ்வி, மருத்துவா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க