இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
எஸ்.பி.யிடம் பாஜக மாநில செயலா் புகாா் மனு
பாஜக மாநிலச் செயலா் ஏ. அஸ்வத்தாமன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணனிடம் வியாழக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு காரில் புறப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். 11-ஆம் தேதி அதிகாலை எனது காா் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியது.
எனது காா் சாலையின் வலது திசையில் சென்ற போது, இடதுதிசையில் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து திடீரென வலது திசையில் இயக்கப்பட்டு பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பேருந்து மீது எனது காா் மோதியது. விபத்து நிகழ்ந்த 2 நிமிஷங்களில் 2 தனியாா் ஆம்னி பேருந்துகள் அங்கு வந்து நின்றன. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமான ஆம்னி பேருந்து உரிய அனுமதியை பெறவில்லை. திட்டமிட்ட தாக்குதலுக்கான முகாந்திரம் உள்ளதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
அப்போது, மாவட்டத் தலைவா் வி. தா்மராஜ், துணைத் தலைவா் வடிவேல் பழனி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.