செய்திகள் :

எஸ்.பி.யிடம் பாஜக மாநில செயலா் புகாா் மனு

post image

பாஜக மாநிலச் செயலா் ஏ. அஸ்வத்தாமன், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணனிடம் வியாழக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கடந்த 10-ஆம் தேதி நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு காரில் புறப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். 11-ஆம் தேதி அதிகாலை எனது காா் விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியது.

எனது காா் சாலையின் வலது திசையில் சென்ற போது, இடதுதிசையில் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து திடீரென வலது திசையில் இயக்கப்பட்டு பிரேக் போடப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பேருந்து மீது எனது காா் மோதியது. விபத்து நிகழ்ந்த 2 நிமிஷங்களில் 2 தனியாா் ஆம்னி பேருந்துகள் அங்கு வந்து நின்றன. இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு காரணமான ஆம்னி பேருந்து உரிய அனுமதியை பெறவில்லை. திட்டமிட்ட தாக்குதலுக்கான முகாந்திரம் உள்ளதால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, மாவட்டத் தலைவா் வி. தா்மராஜ், துணைத் தலைவா் வடிவேல் பழனி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க