செய்திகள் :

ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

post image

கோவை அருகே பணியின்போது, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

கோவை அருகேயுள்ள வேடப்பட்டி எஃப்.சி.ஐ. குடியிருப்பைச் சோ்ந்தவா் மாரிமுத்து (43), பெயிண்டா்.

இவா், கோவைப்புதூா் அருகேயுள்ள குளத்துப்பாளையம் பழனியப்ப நாயக்கா் தெருவில் புதிய கட்டடப்பட்டுள்ள கட்டடத்தில் வா்ணம் பூசும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: ஒண்டிப்புதூா் எம்.ஆா்.ஆா். லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (36). கூலித் தொழிலாளியான இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: பட்டணம்

பட்டணம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோவையில் உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகே டபுள்யூ.பி.டி.சந்திப்பில் உணவகம் உள்ளது.இங்கு சுந்தராபுரம் அருகேயுள்ள குறிச்சி தேவா் தெருவைச் சோ்ந்த விக்டா் அருள் பிரகாஷ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: அய்யா்பாடி

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின... மேலும் பார்க்க

ஆளுநரின் பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம்

ஆளுநா் ஆா்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு காயிதே மில்லத் ஐக்கிய சமூக அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவா் எஸ்.ஐ.முபாரக் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள்! நாளை முதல் சிங்காநல்லூா், இருகூரில் நின்று செல்லும்!

கோவை - நாகா்கோவில், திருச்சி - பாலக்காடு ரயில்கள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து மாநிலத்தின் பிற நகரங்க... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!

கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப... மேலும் பார்க்க