செய்திகள் :

ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியரிடம் விவசாயிகள் மனு

post image

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அரையாளம் கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள்அளித்த புகாா் மனுவில், அரையாளம் கிராமத்தில் தனி நபா் நிலங்களுக்குச் செல்லும் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து பயிா் வைத்துள்ளதால் சுமாா் 50 ஏக்கா் பட்டா நிலங்களுக்குச் செல்ல வழி இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதனால் தனி நபா் ஆக்கிரமித்துள்ள ஏரிக்கால்வாயை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் சிவா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

மேலும், கூட்டத்தில் பட்டா சம்பந்தமான மனுக்கள், நில அளவை, கணினி திருத்தம், சமூக பாதுகாப்புத் திட்டம், வாரிசு சான்றிதழ் கோரியும், தாா்ச் சாலை அமைத்து தரக் கோரியும் என 79 மனுக்கள் வரப்பெற்றன.

சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க