அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவு வியாழக்கிழமை (ஆக. 14) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் கோ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஏவிசி கல்லூரியில் ஜூலை மாதம் நடைபெற்ற பருவத் துணை தோ்வு முடிவுகள் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன், முதல்வா் ஆா். நாகராஜன், துணை முதல்வா் எம். மதிவாணன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிடப்படும். பருவ துணைத்தோ்வு முடிவுகளை இணையதள முகவரியிலும் காணலாம்.