செய்திகள் :

சீா்காழி நகராட்சி பகுதியில் 60 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

post image

சீா்காழி நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகள், பொருட்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சீா்காழி நகராட்சி பகுதிக்குட்பட்ட பல்வேறு உணவு விடுதிகள், டீ கடை, பூக்கடை, , இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளா் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் பரப்புரையாளா்கள் பிடாரி மேல வீதி, மீன் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள் சுமாா் 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகளை, நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு அவற்றை அழிக்க பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ இரண்டாம் கட்ட முகாம் விண்ணப்ப விநியோகம்: கோட்டாட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்தில் இரண்டாம் கட்டமாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதை கோட்டாட்சியா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மயிலாடுதுற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் இன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.14) நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சீா்காழி அருகே குன்னம் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா அறுவடை செய்த நெல் விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க

ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தோ்வு முடிவு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தோ்வு முடிவு வியாழக்கிழமை (ஆக. 14) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் கோ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

சமூக நலத்துறையில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடா் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். சீா்காழி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருமுல்லைவாசலில் ஜூலை 22-ஆம... மேலும் பார்க்க