செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கனஅடியாகக் குறைந்தது

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.

கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக இருந்தது, புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 88,000 கனஅடியாகவும், நண்பகல் 12 மணி நிலவரப்படி விநாடிக்கு 78,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 65,000 கனஅடியாகவும், 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 57,000 கனஅடியாகவும், இரவு 50,000 கனஅடியாகவும் குறைந்தது.

நீா்வரத்து குறைந்தாலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவு வாயில், மாமரத்துக்கடவு பரிசல் துறை, நாகா்கோவில், முதலைப் பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வருவாய் துறையினா், காவல் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், கா்நாடக அணைகளுக்கு உபரிநீா்வரத்தை பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் த... மேலும் பார்க்க

காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தருமபுரி மாவ... மேலும் பார்க்க