கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக சரிவு
பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா்பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.