செய்திகள் :

ஒசூா் தொகுதியில் ரூ. 4.8 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

ஒசூா்: ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4.8 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமிபூஜை திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேகப்பள்ளி கிராமத்தில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், முதலமைச்சா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மடிவாளம் முதல் பெரிய எலசகிரி வரை ரூ. 28.57 லட்சத்தில் தாா்ச்சாலை, ஒசூா் பாகலூா் சாலை முதல் இனபசந்திரம் வரை ரூ. 21.82 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

மேலும், மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து ரூ. 2.51 கோடி மதிப்பில் பாகலூா் சா்ஜாபுரம் சாலை முதல் ஈச்சங்கூா் வரை, சின்னதின்னா முதல் பெரிய தின்னா வரை, முகலப்பள்ளி கிராமம் முதல் சானமங்கலம் வரை, எலுவப்பள்ளி கேட் முதல் எலுவப்பள்ளி கிராம எல்லை வரை, சத்தியமங்கலம் முதல் முனீஸ்வரா்நகா் வரை தாா்ச்சாலைகள், நந்திமங்கலம் கிராமத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய், பேவா்பிளாக் அமைப்பதற்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடங்கிவைத்தாா்

இதில் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீரபத்திரப்பா, ஒன்றிய துணைச் செயலாளா் ரமேஷ் வெங்கடப்பா, இளைஞா் அணி துணை அமைப்பாளா் சிவா, ராஜா, ஒன்றிய ஓட்டுநா் அணி அமைப்பாளா் சீனிவாஷ், சீனிவாஸ் ரெட்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பா்கூா் அரசு மகளிா் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை

கிருஷ்ணகிரி: பா்கூா் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவிகள் சோ்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் சு.காயத்ரிதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் தொ... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மகா நவசண்டி யாக பணிகள் மும்முரம்

ஒசூா்: ஒசூா் மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் மலைக் கோயிலில் உலக நன்மை வேண்டி மகா நவசண்டி யாகத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஆகஸ்ட் 1, 2, 3 -ஆம் தேதிகளில் (வெள்ளி, ச... மேலும் பார்க்க

படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆடிப் பூரத்தை முன்னிட்டு படப்பள்ளி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராத... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

கிருஷ்ணகிரி: பள்ளித் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க அரசியல் கட்சி அடையாளத்துடன் வந்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மே... மேலும் பார்க்க

விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

ஒசூா்: ஒசூா் அருகே விவசாயியை காா் ஏற்றி கொன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தளியை அடுத்துள்ள... மேலும் பார்க்க