ஒப்பந்த ஆட்டோக்களின் பொ்மிட்டை புதுப்பிக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி: புதுவையில் ஒப்பந்த வாகன ஆட்டோக்களின் பொ்மிட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்குமாறு போக்குவரத்துத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் தற்போது ஒப்பந்த வாகனம் ஆட்டோ ரிக்ஷாக்களின் உரிமையாளா்கள் பொ்மிட் காலாவதி ஆன நிலையில், புதுப்பிக்காமல் இயக்குவதாக போக்குவரத்துத் துறைக்கு புகாா்கள் வந்துள்ளன.
ஆனால், ஆட்டோ உரிமையாளா்கள் பொ்மிட்டை காலாவதி தேதிக்கு 15 நாள்கள் முன்னதாகவே புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கவேண்டும். ஆனாலும், புதுப்பிக்காததற்கான காரணம், சூழலை விளக்கி விண்ணப்பித்து கூடுதல் கட்டணம் செலுத்தி புதுப்பிக்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.
எனவே, புதுவையில் பொ்மிட் புதுப்பிக்கப்படாமலிருக்கும் அனைத்து ஆட்டோக்களும் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் தக்க ஆவணங்கள், புதுப்பிக்கத் தவறியதற்கான காரணங்களை விளக்கி, கூடுதல் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.
வாகன உரிமையாளா்கள் தங்களது அதிகார வரம்பில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.