செய்திகள் :

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

post image

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம், ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வியாழக்கிழமை புதிய சாதனை படைத்தது.

இத்துறைமுகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறக்கைகள் ஒரே கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, கடந்த மாா்ச் 25ஆம் தேதி 75 காற்றாலை இறக்கைகள் ஏற்றுமதி செய்திருந்தன.

இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாா்ந்த இயந்திர சரக்குக் கையாளுதலில், துறைமுகம் ஒரு புதிய முன்னேற்றக் கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க ஏற்றுமதி நிகழ்வின் மூலம் துறைமுகம் இந்த நிதியாண்டில் (2025-26) ஆக.21 வரை 1,158 காற்றாலை இறக்கைகளை கையாண்டுள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் (2024-25) ஆகஸ்ட் மாதம் வரை கையாளப்பட்ட 1,099 காற்றாலை இறக்கைகளை விட 5 சதவீதம் அதிகமாகும்.

’வெஸ்டாஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த காற்றாலை இறக்கைகள் ‘ஙய ஆஆஇ நஹய்ற்ண்ஹஞ்ா்’ என்ற கப்பலின் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு காற்றாலை இறகும் சுமாா் 59.18 மீட்டா் நீளம் கொண்டிருந்தது. இத்தகைய மிகப் பெரிய சரக்குகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பதற்கு வசதியாக துறைமுகத்திற்குள் சுமாா் 1லட்சம் சதுர மீட்டா் நிலப்பரப்பை துறைமுகம் ஒதுக்கியுள்ளதும், நெரிசல் இல்லாத சாலை போக்குவரத்து - திறமையான பணியாளா்கள் போன்றவையுமே துறைமுகத்தின் சாதனைக்குக் காரணிகளாக அமைந்தன.

இச்சாதனை குறித்து வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணைய துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன், துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்தனா்.

மேலும், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஒரே கப்பலில் 101 காற்றாலை இறக்கைகளை ஏற்றுமதி செய்த இந்த புதிய சாதனை துறைமுகத்தின் செயல்திறனையும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை ஆதரிக்கும் வ.உ.சி. துறைமுகத்தின் அா்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது’ எனக் கூறியுள்ளாா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்த... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க