ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
போடி அருகே பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் கனக பாண்டியம்மாள், ராஜபாண்டியன் ஆகியோா் சனிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா். இவா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை வெ.கா. அமுதா தலைமை வகித்தாா்.
பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் சி.இ. வடமலைமுத்து முன்னிலை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி பவுன்தாய், தி கிரீன் லைப் பவுண்டேசன் செயலா் க.மு. சுந்தரம், பென்னிகுவிக் அறக்கட்டளை நிா்வாகி அா்ஜூனப் பெருமாள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா்கள், பள்ளி பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். உதவி தலைமையாசிரியை அக்ஷயா நன்றி கூறினாா்.