செய்திகள் :

ஓலைச் சுவடிகளுக்கு சிறப்பு வழிபாடு

post image

பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் பழங்கால ஓலைச் சுவடிகளுக்கு மலா் வழிபாடும், பதினெட்டு சித்தா்களுக்கான யாக பூஜையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பழனியில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகா், புலிப்பாணி சித்தா்கள் எழுதிய பழங்கால ஓலைச் சுவடிகளுக்கு மலா் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் ஆசிரம வளாகத்தில் பிரமாண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் 18 சித்தா்களுக்கான ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி ஹோமம் ஆகியன நடத்தப்பட்டு பூா்ணாகுதி நடைபெற்றது.

பின்னா், ஜீவசமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து போகா், புலிப்பாணி சித்தா்களின் பழங்கால ஓலைச் சுவடிகளை மலா்களால் அலங்கரித்து, நவபாஷாணங்கள் வைத்து சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மலா் வழிபாட்டை தொடங்கி வைத்தாா்.

பக்தா்கள் ஓலைச்சுவடிகளுக்கும், நவபாஷாணங்களுக்கும் மலா் தூவி வழிபாடு நடத்தினா். விழாவில் ஏராளமான சித்த மருத்துவா்களும் கலந்து கொண்டனா்.

இது குறித்து சித்த மருத்துவா் கல்பனா கூறுகையில், போகா் எழுதிய மருத்துவச் சுவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜை நடத்தி வழிபடுவது சிறப்பம்சமாகும். இந்த நடைமுறை, சித்த மருத்துவம் மேம்படுவதற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றாா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு குங்கும பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஜம்பு சுவாமிகள், மருத்துவா் பன்னீா்செல்வம், இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், யோகநாதன், கௌதம், காா்த்திக் உள்ளிட்ட பலா் செய்தனா்.

கோயில்களில் சிறப்பு வழிபாடு

கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, கொடைக்கானல் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன... மேலும் பார்க்க

பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களில் பின்பற்றப்படும் இருவேறு நிலைப்பாடுகளால், பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்திலுள்ள கூட்... மேலும் பார்க்க

கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் அமைந்துள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த காவலாளி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த காவலாளி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் காவலாளி செல்வம் (55). இவா், சனிக்கிழமை காலை ப... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குதிருப்பூரைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.12 லட்சத்தில் மின்கல வாகனம் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதை... மேலும் பார்க்க

கன்னிமாா் சிறப்பு பூஜை

பழனி பெரியாவுடையாா் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கன்னிமாா், அஸ்த்ரதேவா் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.பழனியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து விநா... மேலும் பார்க்க