செய்திகள் :

கஞ்சா கடத்திய பிகாா் மாநில இளைஞா் கைது!

post image

பிகாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே கஞ்சா தடுப்பு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமு தலைமையிலான காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனா்.

அதில், அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜன்(20) என்பதும், சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து ராஜனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ட... மேலும் பார்க்க

3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே உள்ள கருவல... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சி.பி.முருகேசன் (47). தற்போது வள்ளியிரச்சல் சாலை கலை நகரில் வசித்து வந்தாா். அதே பகுதியைச் ச... மேலும் பார்க்க

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது! -பல்லடம் வேளாண் உதவி இயக்குநா் தகவல்

பல்லடம் வட்டாரத்தில் நிலம் தொடா்பான ஆவணங்களைப் பதிவு செய்து தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பல்லடம் வேளாண் உதவி இ... மேலும் பார்க்க