கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் நவீன்குமாா் (20). இவா், கடந்த 29.5.2025 அன்று, திருமானூா் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள நீரேற்று நிலைய பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போது, அரியலூா் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டதையடுத்து, நவீன்குமாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அதற்கான நகல்களை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்டகாவல் துறையினா் வழங்கினா்.