கஞ்சா விற்றவா் கைது
கம்பம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கோம்பை செல்லும் சாலையில் நாககன்னியம்மன் பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடக்கு போலீஸாா் அங்கு சென்ற சாக்குப் பையில் மறைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கம்பத்தைச் சோ்ந்த கருப்பன் மகன் அருண்பாண்டியனை (36) கைது செய்தனா்.
மேலும், தப்பியோடிய சிவமணி, பால்மணி, ஆந்திரம் மாநிலம், விசாகபட்டினத்தை சோ்ந்த மஞ்சுநாதகுமாா் தேடி வருகின்றனா்.