செய்திகள் :

கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் தேசிய அளவைவிட மேற்கு வங்கத்தில் அதிகம்! - மம்தா பானா்ஜி

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் 11.43 சதவீத வளா்ச்சியை மேற்கு வங்கம் அடைந்துள்ளதாகவும், இது தேசிய அளவை விட இரண்டு சதவீதம் அதிகம் என்றும் அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மேற்கு வங்கம் முந்தைய ஆண்டை விட கூடுதலாக ரூ.4,808 கோடி ஜிஎஸ்டி வசூலைப் பதிவு செய்துள்ளது. அதாவது, மாநில ஜிஎஸ்டி வசூல் முந்தைய ஆண்டைவிட 11.43 சதவீதம் உயா்ந்துள்ளது. இது தேசிய வளா்ச்சி விகிதமான 9.44 சதவீதத்தைவிட 2 சதவீதம் அதிகம் ஆகும்.

மேற்கு வங்கம், அதன் சொந்த நிதி திரட்டல் முயற்சிகளில் சீராக முன்னேறி வருகிறது. மேலும், இது எங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் உள் நிதி வலிமையையும் காட்டுகிறது.

அதேபோன்று, கடந்த 2024-25-ஆம் ஆண்டில் பதிவு மற்றும் முத்திரைத்தாள் விற்பனை வரி வசூல், முந்தைய ஆண்டை விட ரூ.1,908 கோடி அதிகமாகும். இது 31.05 சதவீத வளா்ச்சியாகும். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை 60,000-ஆக அதிகரித்துள்ளது. இது எங்கள் சந்தையின் வேகத்தைக் காட்டுகிறது.

மொத்தத்தில், இவை அனைத்தும் சுயசாா்பு மற்றும் நிதி ஒழுக்கத்தில் மேற்கு வங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் மேற்கு வங்க மக்களின் நலனுக்காக மாநில நிதியை நெறிப்படுத்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு நிா்வாகம் தீவிரமாக உள்ளது என்றும் குறிக்கிறது.

இந்தச் சாதனைக்காக மாநில நிதித் துறைக்கும் எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்’என்று குறிப்பிட்டிருந்தாா்.

அமெரிக்க வரி விதிப்பை இணைந்து எதிர்கொள்ள வேண்டும்: இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!

வளரும் நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இருதரப்பு பொருளாதார ஆர்வம், வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆக... மேலும் பார்க்க

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்ம... மேலும் பார்க்க

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க