செய்திகள் :

கடம்பூரில் தொழிலாளிக்கு மிரட்டல்: 2 போ் கைது

post image

கடம்பூரில் விவசாயத் தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சங்கராப்பேரி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த ஆசிா்வாதம் மகன் ஜெயராஜ் (48), சங்கராப்பேரி காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் கருப்பசாமி (44). கடம்பூா் கோடாங்கால் காலனி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம் (55). விவசாயத் தொழிலாளி.

இடம் தொடா்பாக இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்குமிடையே பிரச்னை இருந்ததாம். அந்த இடத்தைத் தான் வாங்குவதாக இருந்தநிலையில், அதற்கு ஆறுமுகம் தடையாக இருப்பதாக கருப்பசாமி நினைத்திருந்தாராம்.

இந்நிலையில், கடம்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நின்றிருந்த ஆறுமுகத்தை ஜெயராஜும், கருப்பசாமியும் சோ்ந்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த ஆறுமுகம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராஜ், கருப்பசாமியைக் கைது செய்தனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க