கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
கடையம் அருகே மளிகை கடையில் திருட்டு
கடையம் அருகே முதலியாா்பட்டியில் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கடையம் அருகேயுள்ள முதலியாா்பட்டி பிரதான சாலையில் கீழக் கடையம், சின்ன பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னுத் துரை மகன் விஜயகுமாா் (43). மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையைபூட்டிச் சென்றவா் சனிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோதுகடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா். மேலும் உள்ளே சென்று பாா்த்ததில் கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை காணவில்லையாம்.
இதுகுறித்த தகவலின்பேரில், கடையம் காவல் ஆய்வாளா் சுரேஷ் குமாா் தலைமையில் போலீஸாா், விசாரணை மேற்கொண்டு, அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் மா்மநபா்,கடையில் புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்த்து. இதையடுத்துமா்ம நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.