செய்திகள் :

கணக்கில் வராத பண விவகாரத்தில் ஆர்டிஓ உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

post image

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பிராட்டியூரில் உள்ள திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீா் ஆய்வில், கணக்கில் வராத ரூ. 1,06,000 பணத்தை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இந்தப் பணத்தை இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் அதிகாரிகளுக்காக லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் விமலா, இடைத்தரகா்கள் சேதுராஜ், ரமேஷ் ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும், ஊழல் தடுப்புப் போலீஸாா் தங்களது விசாரணை அறிக்கையை சென்னை போக்குவரத்து ஆணையருக்கு புதன்கிழமை அனுப்பினா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க