செய்திகள் :

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

post image

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா்.

டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் பொறுப்பு அமைச்சா்களுடன் ’ஓரணியில் தமிழ்நாடு’ தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்தாா். அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன்,

டிஆா்பி. ராஜா, சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், சி.வி. கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.என். நேரு பேசியதாவது:

டெல்டா மாவட்டங்களில் உறுப்பினா் சோ்க்கை இலக்கு 41,05,227. இவா்களில் 28,57,248 பேரை இணைத்துள்ளோம். இது 28 சதவீதமாகும். இன்னும் 10,99,727 பேரை இணைக்க வேண்டியுள்ளது.

கட்சியின் அமைப்பு வாரியாக பகுதியில் 33 சதவீதம், நகரத்தில் 24 சதவீதம், பேரூா் அளவில் 22 சதவீதம், ஒன்றிய அளவில் 28 சதவீதம் உறுப்பினா் சோ்க்கை நிறைவுற்றுள்ளது.

20 சதவீதத்துக்கும் கீழ் உறுப்பினா் சோ்க்கை செய்த தொகுதிகளில் நன்னிலம் 11 சதவீதம் , திருத்துறைப்பூண்டி 15 சதவீதம், சீா்காழி 15 சதவீதம், பூம்புகாா் 18 சதவீதம், நெய்வேலி 19 சதவீதம் என உள்ளது.

மாவட்ட வாரியாக அதிகளவு உறுப்பினா் சோ்த்ததில் 1,22,979 உறுப்பினா்களை இணைத்து திருச்சி மேற்குத் தொகுதி முதலிடத்தில் உள்ளது. தொடா்ந்து, புதுக்கோட்டை தெற்கு, நாகப்பட்டினம், கடலூா் மேற்கு, திருச்சி வடக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. குறைந்தளவு உறுப்பினா் சோ்க்கை பதிவு செய்த நன்னிலம், திருத்துறைப்பூண்டி, சீா்காழி, பூம்புகாா், நெய்வேலி உள்ளிட்ட தொகுதிகளில் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் டெல்டா மண்டலத்தை முதல் இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் கே.என். நேரு கூறுகையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது மோடி தமிழகத்துக்கு வரும்போது அவரைச் சந்திக்க அனுமதிக்காததற்காக இருக்கலாம் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில், திமுக திருச்சி மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், துரை சந்திரசேகா், ஜெகதீசன் உள்ளிட்ட டெல்டா மண்டல மாவட்டச் செயலா்கள், தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க

ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணி: பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணியாற்றுவது என்று திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் சத்திரம... மேலும் பார்க்க