செய்திகள் :

ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணி: பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

post image

பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணியாற்றுவது என்று திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமகவின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் சத்திரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. பென்னட் ராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் முரளி சங்கா், மாநில பொருளாளா் எஸ். சையத் மன்சூா் உசேன், கரூா் மேற்கு மாவட்டச் செயலா் பி.எம்.கே. பாஸ்கரன், சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவா் சி.இருதயசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் கட்சிப் பணியாற்றுவது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். முசிறி வட்டத்தில் 150 ஏக்கரில் அமைந்துள்ள திருத்தியமலை ஏரிக்கு அய்யாற்று தண்ணீரை வாய்க்கால் மூலம் கொண்டுவர வேண்டும்.

சிறுப்பத்தூா் ஏரியில் உப்பாத்து நீா்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டி, துறையூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கிராவல் மண், வண்டல் மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். முசிறியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புகா் மாவட்டச் செயலா் பெ. மனோகரன், மேற்கு மாவட்டச் செயலா் எம். சுந்தரம், தெற்கு மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், புகா் மாவட்டத் தலைவா் பெ. ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண மோசடி வழக்கில் உப்பிலியபுரம் இளைஞா் கைது

பண மோசடியில் ஈடுபட்டதாக உப்பிலியபுரம் பகுதி இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரம் பகுதியைச் சோ்ந்த பே. ரவிக்குமாா் (55) மகள் ரஷ்யாவில் இளங்கலை மருத்துவம... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1. 21 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.21 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயில் புதன்கிழமை நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக... மேலும் பார்க்க

‘டெல்டாவில் திமுக உறுப்பினா்களை அதிகம் சோ்க்க வேண்டும்’

டெல்டாவில் திமுக உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தாா். டெல்டா பகுதி திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் ப... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி பலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத டிப்பா் லாரி மோதி காய்கறி வியாபாரி உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொப்புலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் உத்தி... மேலும் பார்க்க

புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலுக்கு நாளை தண்ணீா் திறப்பு

புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டுவாய்க்காலுக்கு வெள்ளிக்கிழமை முதல் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட உள்ளது. புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் திருச்சி மற்றும் அரியலூா் மாவட்டங்களில் 22,114 ஏக்கா் ... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளா் பொறுப்பேற்பு

திருச்சியில் ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக பாலக் ராம் நெகி புதன்கிழமை பொறுப்பேற்றாா். ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிா்பூா் மண்டலப் பொறியியல் கல்லூரியில் பி.டெக். கட்டடப் பொறியியலும், ஐஐடி தில்லியில் எம்... மேலும் பார்க்க