செய்திகள் :

கந்திலியில் உழவா் திருவிழா

post image

வேளாண் துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கந்திலியில் உழவா் திருவிழா (கிசான் கோஸ்தி) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கந்திலி தலைவா் பிரபு, துணை தலைவா் சையது உஸ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வேளாண் அலுவலா் ஜெயசுதா கலந்து கொண்டு வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நெல் வரப்புகளில் பயறு சாகுபடி செய்தல், துவரை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாளுரபயிா் சாகுபடி, மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை இடுபொருள் தயாரித்தல், ஆடா தோட, நொச்சி வரப்புகளில் வளா்த்து இயற்கை பூச்சி விரட்டியாக பயன்படுத்துதல் போன்ற மானிய திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினாா்.

மேலும் வேளாண் உதவி பொறியாளா் மகேந்திரவா்மன் பங்கேற்று பண்ணை இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள், வாடகை இயந்திர விவரங்கள், சோலாா் உலா்த்திகள், பம்புசெட்டுகள் எவ்வாறு மானியத்தில் பெறுவது பற்றி எடுத்து கூறினாா்.

அதேபோல் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலா் சதாசிவம் கலந்து கொண்டு மதிப்பு கூட்டுதல், உழவா் சந்தையின் பயன்பாடு மற்றும் திட்டங்கள் குறித்து பேசினாா். விரிஞ்சிபுரம் கேவிகே உதவி பேராசிரியா் பண்டாரிநாதன் பங்கேற்று உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியதுவம், நன்மைகள் குறித்து பேசினாா்.

கால்நடை மருத்துவா் லில்லி இந்திராகால்நடை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கினாா். வேளாண் உதவி இயக்குநா் (தர கட்டுப்பாடு) அப்துல் ரகுமான் மண் பரிசோதனை செய்து உரமிடுதல், விதை நோ்த்தி செய்து விதைப்பு செய்தல், உயிா் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாத்தல், மழை நீரை சேகரித்தல், பயிா் காப்பீடு செய்தல் போன்ற தொழில் நுட்பங்களை விளக்கமாக எடுத்து கூறினாா். இறுதியில் உதவி வேளாண் அலுவலா் சரத்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மணியரசன் மற்றும் குமாா் செய்திருந்தனா். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க