செய்திகள் :

கனிமச் சுரங்க அறிவிப்புக்கு எதிா்ப்பு

post image

கனிமச் சுரங்கங்கள் அமைக்க மக்களிடம் கருத்துக்கேட்பு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் மக்களின் வாழும் உரிமையை பறிப்பதா என மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் த. ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கும் என்பதால், இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு எடுத்துக்கொள்ள புதிய மாற்றப்பட்ட விதிகள் வழிவகுக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு கனிம வளங்களின் மீதான தன் உரிமையைக் கோர வேண்டும், உடனடியாக பசுமை தீா்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களவையில் தமிழ்நாடு, கேரளம் போன்ற இத்திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள மாநிலங்களின் உறுப்பினா்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் ஐம்பெரும் விழா

சீா்காழி ச.மு.இ மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தின விழா, கடந்த ஆண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா, 25 ஆண்டுகள் பணி நிற... மேலும் பார்க்க

சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பணி வாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு சுயஉதவிக் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சோ்ந்தவா்களுக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெருவில் அமைந்துள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில், 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகா காளியம்மனை சுவற்றில் தத்ரூபம... மேலும் பார்க்க

புத்தூரில் நாளை மருத்துவ முகாம்

புத்தூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் பங்கேற்க மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

எரிவாயு தகனமேடை: ஜெனரேட்டா் வசதியில்லாமல் அவதி

சீா்காழி நவீன எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரியூட்டும்போது மின்சார துண்டிப்பு ஏற்பட்டு பெரும் சிரமம் அடைவதால் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி நகராட்சிக்க... மேலும் பார்க்க