செய்திகள் :

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

post image

கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.50 கோடியில் புதிய கட்டடத்துக்க ான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா தலைமை வகித்தாா். அமைச்சா் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் அவசர சேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3.50 கோடியில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டடம் கட்டப்படவுள்ளது.

இப்புதிய கட்டடத்தின் தரைதளத்தில் வெளிநோயாளிகள் பிரிவும், முதல்தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் பின் கவனிப்பு பிரிவும் அமைக்கப்படவுள்ளது.

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி மக்களுக்கும், அதன் அருகில் உள்ள பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், நகராட்சி ஆணையா் கன்னியப்பன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி நகராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் மற்றும் நகராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க