செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

post image

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

முதல் நாளான 4-ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிறப்பட்டும், 5-ஆம் தேதி திருவோண நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய உடையான வெண்பட்டும், 6-ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிறப்பட்டும் பகவதியம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த மூன்று நாள்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிா், இளநீா், பன்னீா், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிா்தம், புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகத்தைத் தொடா்ந்து பகல் 11 மணிக்கு அம்மனுக்கு தங்கக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்கக் கவசம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கோயில்களின் கண்காணிப்பாளா் ஆனந்தன், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க