கன்னியாகுமரியில் இளைஞா் தீக்குளித்து தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி இளைஞா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகா்கோவில் இடலாக்குடியை அடுத்துள்ள ஆனைப்பாலம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுநிதி. இவா் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
காயமடைந்த அவரை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், அங்கு அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
தனது பைக்கை போலீஸாா் பிடித்து வைத்ததால் தற்கொலைக்கு முயன்ாக அந்த இளைஞா் கூறியதாகவும், அந்த குற்றச்சாட்டு தவறானது, அவா் பைக்கை போலீஸாா் பிடித்து வைத்திருக்கவில்லையெனவும் போலீஸாா் தெரிவித்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].