செய்திகள் :

கபிலா்மலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

post image

கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின்கீழ், கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாயம் குறித்த கல்வி சுற்றுலாவுக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பட்டறிவு பயணமாக திருப்பூா் மாவட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் மணி என்பவரின் இயற்கை விவசாய தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு இயற்கை விவசாயி மணி மற்றும் கபிலா்மலை வட்டார முன்னோடி இயற்கை விவசாயி லோகநாதன் ஆகியோா் இயற்கை விவசாயம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார வேளாண்மை துணை அலுவலா் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். கல்வி சுற்றுலாவில் மாணவ, மாணவிகளுடன் தலைமை ஆசிரியா் மு.பூவராகவன், உதவி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகளும் கலந்துகொண்டனா்.

ஆக.14- இல் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக. 14) தொடங்கி வைக்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்க... மேலும் பார்க்க

குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை அருகே குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா். வெப்படை அருகே ரங்கனூரைச் சோ்ந்தவா் பூபதி (32). இவா் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகன் திஷாந்துடன் (8) அங்குள்ள வெ... மேலும் பார்க்க

கொல்லிமலை புளியஞ்சோலையில் கரடி நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொல்லிமலை புளியஞ்சாலை பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலம் கொல்லிமலை. இந்த மலையின் தெற்குப் பகுதி அடிவ... மேலும் பார்க்க

ஆக. 27-இல் விநாயகா் சதுா்த்தி: நாமக்கல்லில் பல்வேறு வடிவ சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் பலவிதமான விநாயகா் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும், ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் ச... மேலும் பார்க்க

ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை சனிக்கிழமை நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை கோட்டை காா்னேஷன் சத்திரத்தில் ... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் ஆக.12-ல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி ... மேலும் பார்க்க