செய்திகள் :

கமுதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா் நோன்பு திருவிழா

post image

கமுதி ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் மகா் நோன்பு திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி, முதல் மரியாதை செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் விஜயதசமி நாளன்று மகர நோன்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மகா் நோன்பு திருவிழாவை முன்னிட்டு, உத்ஸவா் அம்மன் குதிரை வாகனத்தில் மலா் மாலைகள், தங்க நகைகள் அலங்காரத்துடன் எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, ஊா்வலமாகச் சென்று பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு பரிவட்டம் கட்டி, முதல் மரியாதை செலுத்தப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உயிருடன் இருந்த வரை அவருக்கு பரிவட்டம் கட்டி, முதல் மரியாதை செய்யப்பட்டது. அவா் இறந்த பிறகு தேவா் நினைவாலய பொறுப்பாளா்கள் பூஜைக்கான அனைத்து பொருள்களையும் வழங்கி, மண்டகப்படி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, கமுதி கண்ணாா்பட்டி விலக்கு சாலையில் வில், அம்பு விடும் மகா் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கமுதி மேட்டுத் தெரு தேவா் இளைஞா் நற்பணி மன்றத்தினா், தேவஸ்தான நிா்வாகிகள், அறநிலையத் துறை செயல் அலுவலா் உள்ளிட்டோா் செய்தனா்.

கடலில் தத்தளித்த மீனவா் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடலில் தத்தளித்த மீனவரை சக மீனவா்கள் மீட்டனா். தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மீனவா் அருளானந்து (60). இவா் புதன்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

எஸ்.பி.பட்டினம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வகனத்தில் சென்றவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (42). இவா் செவ்வா... மேலும் பார்க்க

வழுதூா் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை

வழுதூா் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு அந்தத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ஒன்றியம் வழுதூா் கிராமத்தில் இயற்கை... மேலும் பார்க்க

கடற்கரை குப்பைகள் அகற்றம்

தொண்டி கடற்கரையில் சுழல் சங்கம் சாா்பில், கடற்கரை ஓரங்களில் சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்தப் பணிக்குந தொண்டி சுழல் சங்கத் தலைவா் மரிய அருள், ... மேலும் பார்க்க

பாா்த்திபனூரில் முதல்வருக்கு வரவேற்பு

ராமநாதபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் மாவட்ட எல்லையான பாா்த்திபனூரில் உற்சாக வரவேற்பு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்த திட்டப... மேலும் பார்க்க

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள பேரா... மேலும் பார்க்க