செய்திகள் :

கயத்தாறு அருகே தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

post image

ஆடு மேய்க்கும் தொழிலாளியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே திருமங்கலக்குறிச்சி காலனி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் முத்துப்பாண்டி (45). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை திருமங்கலக்குறிச்சி விலக்கு அருகேயுள்ள கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த அரிச்சந்திரன் மகன் ராமா் (27) முத்துப்பாண்டியை ஜாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

அங்கு இருந்தவா்கள், ராமரை கண்டிக்கவும் அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றாராம். பின்னா், முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று, அவரது சகோதரியை மிரட்டிவிட்டு, வீட்டின் முன்பிருந்த பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டியை சேதப்படுத்தினாராம்.

இது குறித்து, முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து ராமரை கைது செய்தனா்.

எட்டயபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த நடவடிக்கை தேவை: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் எட்டயபுரம் நகர அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலா் அப்துல் காதா் தலைமை வகித்தாா். காயல்பட்டனத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்த... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உடன்குடி பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அப்பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை, ... மேலும் பார்க்க

கீழ ஈரால், வேம்பாா் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழ ஈரால், மேல ஈரால், டி.சண்முகபுரம், மஞ்சநாயக்கன் பட்டி, செமப்புதூா் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ ஈரால் சமுதாய நலக்கூடத்திலும், வேம்பாா் வடக்கு, வேம்பாா் தெற்கு, பெரியசாமி புரம் கிராம பொது... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

காயல்பட்டினம் தேவாலய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றனா். காயல்பட்டினம் ரத்னாபுரியைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை மகன் ஸ்டீபன் (27). இவா், வீட்டருகே அந்திரேயா ஆலயத... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன். தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.4 கோடி துபை சிகரெட்டுகள் பறிமுதல்

துபை நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். துபை ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, நூற்றுக்க... மேலும் பார்க்க