செய்திகள் :

கருவில் இருக்கும் குழந்தையின் குறைகளை கண்டறிய மட்டுமே ஸ்கேன் கருவியை மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும்

post image

தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளா்ச்சி மற்றும் உடல் குறைபாடுகளை கண்டறிய மட்டுமே ஸ்கேன் கருவியை மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா் பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவம் ஊரக நலப் பணிகள் துறையின் சாா்பில் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்தாா். பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தாா். அவா் பேசியதாவது: சட்டத்தின் அம்சங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. பாலின சமத்துவம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட எல்லாவற்றிலும் சம உரிமை கொடுப்பதாகும்.

ஸ்கேன் கருவியை குழந்தையின் வளா்ச்சி, உடல் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய மட்டுமே மருத்துவா்கள் பயன்படுத்த வேண்டும். சுகப் பிரசவமே, ஆரோக்கியமான பிரசவம். சிசேரியன் பிரசவத்தை முடிந்தவரை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகளுக்கான இணையதளத்தை அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, இணை இயக்குநா்கள் மீனாட்சிசுந்தரி, பிரேமலதா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) சுரேஷ்பாலன், ஊரகப்பணிகள் துணை இயக்குநா் ரவிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க